செய்திகள்
பேரையூர் அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது
பேரையூர் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
சேடபட்டி போலீசார் கணவாய்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பொன்னம்பட்டியை சேர்ந்த அங்கன் (வயது 55) என்பவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே விற்பனை செய்வதற்காக 150 கிராம் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அங்கனை கைது செய்தனர்.