செய்திகள்
ஸ்ரீரங்கம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
ஸ்ரீரங்கம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் புதுதெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 56). கொத்தனாரான இவர், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் விரக்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.