செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் மன்னார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன் வயது(35). வெளிநாட்டில் கூலி வேலை செய்து வந்த இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
இந்த நிலையில் வீரபத்திரன் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவுசெய்து வீரபத்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் மன்னார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன் வயது(35). வெளிநாட்டில் கூலி வேலை செய்து வந்த இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
இந்த நிலையில் வீரபத்திரன் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவுசெய்து வீரபத்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.