செய்திகள்
கோப்புபடம்

ராமநாதபுரத்தில் மதுவிற்ற 88 பேர் கைது

Published On 2021-01-17 11:08 GMT   |   Update On 2021-01-17 11:08 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 88 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 88 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதவிர, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 46 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News