செய்திகள்
தர்மபுரி அருகே வேன் மோதி மூதாட்டி பலி
தர்மபுரி அருகே வேன் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே சவுலூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்மாள் (வயது 62). இவர் தர்மபுரி 4 ரோடு பகுதியில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.