செய்திகள்
கோப்புபடம்

ஸ்பிக்நகர் அருகே மது பாட்டில் வைத்திருந்த 5 பேர் கைது

Published On 2021-01-16 14:30 GMT   |   Update On 2021-01-16 14:30 GMT
ஸ்பிக்நகர் அருகே மது பாட்டில் வைத்திருந்த 5 பேரை போலீசா கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சேட்டைநாதன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தனித்தனியாக முத்தையாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது அந்த பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த முத்தையாபுரம் அய்யன் கோவில் தெரு பச்சைமால் (வயது 36) , தூத்துக்குடி பெருமாள்புரம் பொன்சிங் (45) , புதுக்கோட்டை பேரூரணி ஆபிரகாம் (51) அய்யன்கோவில் தெரு கணேசன் (56) முள்ளக்காடு சாமி நகர் ஈஸ்வரன் (27) ஆகியோரை பிடித்து சோதனையிட்டனர். 

அவர்கள் விற்பனைக்காக மது பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவரிடமிருந்த 41 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News