செய்திகள்
தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் மாணவி உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2021-01-16 12:43 GMT   |   Update On 2021-01-16 12:43 GMT
வெவ்வேறு சம்பவங்களில் மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டினம் மணல்மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகள் செண்பகவள்ளி (வயது 16). இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா முகவூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக அதிகமாக தலைவலி இருந்து வந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட செண்பகவள்ளி வீட்டில் தூக்கில் தொங்கினார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செண்பகவள்ளி ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் aசொக்கம்பட்டி அருகே உள்ள திருவேட்டநல்லூர் பார்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பாதாள முத்தம்மாள் (65). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்களுக்கு சொத்துக்களை பிரித்து கொடுக்காததால் குடும்பத்தில் தொடர்ந்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயலில் உள்ள புளியமரத்தில் பாதாள முத்தம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகிரி அருகே தேவிப்பட்டணம் கீழூர் ராமசாமியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (57). இவர் அதே ஊரில் மத்திய கூட்டுறவு வங்கி கடன் சங்கத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஒரு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமலும், தீராத வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் தமிழ்ச்செல்வன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News