செய்திகள்
புதுக்கடை அருகே மதுவிற்ற 4 பேர் கைது
புதுக்கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
புதுக்கடை:
புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையிலான போலீசார், பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த எட்வின் (வயது 42) என்பவர் அங்கு மதுவிற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் சஜீவ்குமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 461 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று கொல்லங்கோடு போலீசார் ரோந்து சென்ற போது மது விற்ற ரூபி (77) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களும், ராதாகிருஷ்ணன் (60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.