என் மலர்
நீங்கள் தேடியது "4 arrest"
உடுமலையில் இரிடியம் மோசடி விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த பழக்கடை சிவா, செந்தில், பழனிசாமி, சேகர் ஆகியோர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரியாஸ் (24) என்பவரை அணுகினர். அப்போது அவரிடம் தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும், அதனை வீட்டில் வைத்திருந்தால் பணம் கொழிக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதனை நம்பிய ரியாஸ் இரிடியத்தை வாங்க முன்வந்துள்ளார். அதற்கு முன் பணமாக ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று 4 பேரும் கேட்டுள்ளனர். இதையடுத்து ரியாசும் முன்பணமாக ரூ.2லட்சம் கொடுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் 4 பேரும் ரியாசுக்கு இரிடியத்தை கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து ரியாஸ் தனது நண்பர்களான தேனியை சேர்ந்த வினீத் , இஸ்மாயில்(35), கதிரேசன் (28) ஆகியோர் உடுமலையில் உள்ள பழக்கடை சிவா வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த சிவா மற்றும் 3 பேரிடம் இரிடியத்தை உடனே தரும்படி கேட்டுள்ளனர்.
அப்போது சிவா இரிடியம் பூஜையில் இருப்பதாகவும், அது மட்டுமின்றி மேலும் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ரியாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சிவா மற்றும் அவரது நண்பர்கள் மீது மிளகாய் பொடியை தூவியதுடன் கத்தியை காட்டி மிரட்டி சிவா வீட்டில் இருந்த இரிடியத்தை எடுத்து சென்றனர்.
இது குறித்து இரு தரப்பினரும் உடுமலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இஸ்மாயில், கதிரேசன், சிவா, சேகர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மற்ற 4 பேரும் தலைமறைவாகி விட்டனர்.அவர்களை மாவட்ட எஸ்.பி.சசாங் சாய் , உடுமலை டி.எஸ்.பி. தேன்மொழிவேல் உத்தரவின்பேரில் 4 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
மொரப்பூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டையம்பட்டியை சேர்ந்த சண்முகம் (வயது 43), தொங்கனூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (60), மோட்டூரை சேர்ந்த சங்கர் (48), ,எம்.வேட்ரப்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (22) ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 50 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மதுபாட்டில் கடத்தியதாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக ரோந்து செல்லுமாறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபத்திரசாமி, தமிழரசன் மற்றும் போலீசார் மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது தேங்காய்திட்டு பகுதியில் இருந்து 2 பேர் 2 ஸ்கூட்டியில் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்த போது ஸ்கூட்டியில் இருந்த பைநிறைய மதுபாட்டில்கள் இருந்தது.
மேலும் சீட்டுகளின் உள்பகுதியிலும் மது பாட்டில்கள் மறைத்து வைத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த தியாகு (வயது 30) டாட்டா ஏசி டிரைவர் என்பதும், மற்றொருவர் பாலு (35) தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
அவர்கள் இருவரும் புதுவையில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை வாங்கி மரக்காணத்தை அடுத்த கூனிமேடுக்கு கடத்த பாலுவின் வீட்டில் வைத்துள்ளனர்.
பகல் நேரங்களில் மது கடத்தினால் போலீசாரிடம் மாட்டிவிடுவோமோ? என்று நினைத்து அதிகாலையில் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 800 மதுபாட்டில்களும், அவர்கள் ஓட்டி வந்த 2 ஸ்கூட்டியையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் அவர்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
புதுவைலிங்காரெட்டி பாளையத்தில் காட்டேரிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த ஒரு பையை சோதனையிட்ட போது அதில், 37 லிட்டர் பாக்கெட் சாராயத்தை தமிழக பகுதிக்கு கடத்தி செல்ல இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாராயம் கடத்திய சந்தைக்புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அருண் (23), மூர்த்தி (24) ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் பாண்கோஸ் பள்ளி அருகே நடத்திய சோதனையிலும் 48 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் அதை கடத்தி வந்தவர் பேராவூரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. பின்னர் சுரேசை கைது செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், மது பாட்டில்களை போலீசார் கலால்துறையினரிடம் ஒப்படைத்தனர். #tamilnews
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக ரோந்து செல்லுமாறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபத்திரசாமி, தமிழரசன் மற்றும் போலீசார் மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது தேங்காய்திட்டு பகுதியில் இருந்து 2 பேர் 2 ஸ்கூட்டியில் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்த போது ஸ்கூட்டியில் இருந்த பைநிறைய மதுபாட்டில்கள் இருந்தது.
மேலும் சீட்டுகளின் உள்பகுதியிலும் மது பாட்டில்கள் மறைத்து வைத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த தியாகு (வயது 30) டாட்டா ஏசி டிரைவர் என்பதும், மற்றொருவர் பாலு (35) தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
அவர்கள் இருவரும் புதுவையில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை வாங்கி மரக்காணத்தை அடுத்த கூனிமேடுக்கு கடத்த பாலுவின் வீட்டில் வைத்துள்ளனர்.
பகல் நேரங்களில் மது கடத்தினால் போலீசாரிடம் மாட்டிவிடுவோமோ? என்று நினைத்து அதிகாலையில் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 800 மதுபாட்டில்களும், அவர்கள் ஓட்டி வந்த 2 ஸ்கூட்டியையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் அவர்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
புதுவைலிங்காரெட்டி பாளையத்தில் காட்டேரிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த ஒரு பையை சோதனையிட்ட போது அதில், 37 லிட்டர் பாக்கெட் சாராயத்தை தமிழக பகுதிக்கு கடத்தி செல்ல இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாராயம் கடத்திய சந்தைக்புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அருண் (23), மூர்த்தி (24) ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் பாண்கோஸ் பள்ளி அருகே நடத்திய சோதனையிலும் 48 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் அதை கடத்தி வந்தவர் பேராவூரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. பின்னர் சுரேசை கைது செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், மது பாட்டில்களை போலீசார் கலால்துறையினரிடம் ஒப்படைத்தனர். #tamilnews
மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பறிமுதல் செய்தனர்.
மாதவரம்:
மாதவரம் பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவு நடந்து வருகின்றன. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மாதவரம் புதிய பஸ்நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த வடிவேலு, தனசேகர் என்பதும், இருவரும் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவர் மீதும் எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
கைதானவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வேற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அலமேலு. இவர் கடந்த மாதம் 13-ந்தேதி வீட்டு வாசலின் அருகே பால் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அலமேலுவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கசங்கிலியை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், சதிஷ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
மாதவரம் பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவு நடந்து வருகின்றன. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மாதவரம் புதிய பஸ்நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த வடிவேலு, தனசேகர் என்பதும், இருவரும் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவர் மீதும் எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
கைதானவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வேற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அலமேலு. இவர் கடந்த மாதம் 13-ந்தேதி வீட்டு வாசலின் அருகே பால் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அலமேலுவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கசங்கிலியை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், சதிஷ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
போரூரில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜபருல்லா.
துபாயில் தொழில் அதிபராக இருக்கும் ஜபருல்லா. தனது மகள் ஜகினாவை மருத்துவ மேல் படிப்பான எம்.எஸ். படிக்க வைக்க விரும்பினார். இந்த நிலையில் நெய்வேலியை சேர்ந்த சிலர் மருத்துவ சீட் வாங்கித்தர உதவுவதாக கூறினார்கள்.
போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் தங்களுக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் பணம் கொடுத்து சீட் வாங்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்கள்.
இதை உண்மை என்று நம்பிய ஜபருல்லா, நெய்வேலியை சேர்ந்த பிரவீன், செல்வராஜ், பாலாஜி, சக்கரவர்த்தி, திருப்பூரை சேர்ந்த ரகு என்கிற மருதாசலம் ஆகியோருக்கு 2 தவணையாக பணம் வழங்கினார். இவர்களிடம் மொத்தம் ரூ.1 கோடியே 72 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
ஆனால் சொன்னபடி மருத்துவமேல் படிப்புக்காக சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து போரூர் போலீசில் ஜபருல்லா புகார் செய்தார்.
இதையடுத்து, அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவுப்படி போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர் மேற்பார்வையில் பணம் வாங்கியதாக கூறிய 5 பேரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போரூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன், குற்றம் சாட்டப்பட்ட பிரவீன், செல்வராஜ், பாலாஜி, ரகு என்கிற மருதாசலம் ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். சக்கரவர்த்தி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்காமல் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் ஆயுதபடை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. #tamilnews
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜபருல்லா.
துபாயில் தொழில் அதிபராக இருக்கும் ஜபருல்லா. தனது மகள் ஜகினாவை மருத்துவ மேல் படிப்பான எம்.எஸ். படிக்க வைக்க விரும்பினார். இந்த நிலையில் நெய்வேலியை சேர்ந்த சிலர் மருத்துவ சீட் வாங்கித்தர உதவுவதாக கூறினார்கள்.
போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் தங்களுக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் பணம் கொடுத்து சீட் வாங்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்கள்.
இதை உண்மை என்று நம்பிய ஜபருல்லா, நெய்வேலியை சேர்ந்த பிரவீன், செல்வராஜ், பாலாஜி, சக்கரவர்த்தி, திருப்பூரை சேர்ந்த ரகு என்கிற மருதாசலம் ஆகியோருக்கு 2 தவணையாக பணம் வழங்கினார். இவர்களிடம் மொத்தம் ரூ.1 கோடியே 72 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
ஆனால் சொன்னபடி மருத்துவமேல் படிப்புக்காக சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து போரூர் போலீசில் ஜபருல்லா புகார் செய்தார்.
இதையடுத்து, அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவுப்படி போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர் மேற்பார்வையில் பணம் வாங்கியதாக கூறிய 5 பேரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போரூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன், குற்றம் சாட்டப்பட்ட பிரவீன், செல்வராஜ், பாலாஜி, ரகு என்கிற மருதாசலம் ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். சக்கரவர்த்தி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்காமல் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் ஆயுதபடை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. #tamilnews
தொப்பூர் அருகே மினிலாரியில் கடத்தி வந்த 60 பண்டல் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
தருமபுரி:
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு தருமபுரி வழியாக அடிக்கடி பன்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக தருமபுரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை கண்காணித்து வாகன சோதனையில் ஈடுபட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தர விட்டார்.
அவரது உத்தரவின் பேரில் கடந்த மாதத்தில் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை தருமபுரி வழியாக கடத்தி வந்தவர்களையும், அவரது வண்டிகளையும் தொப்பூர் சோதனை சாவடி அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.
மீண்டும் குட்கா மற்றும் தடை செய்யப்ட்ட புகையிலை பொருட்களை தமிழகத்திற்கு கடத்தி செல்வதாக வந்த ரகசிய தகவலை கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று தொப்பூர் சோதனை சாவடி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஒரு மினிலாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது வண்டியில் வந்த 4பேர் சந்தேகம்படியான முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்தனர். உடனே போலீசார் மினிலாரி சோதனை செய்தனர். அப்போது வண்டியில் 60 பண்டல்களில் 70 அட்டை பெட்டிகளில் அடைத்து மறைத்து வைத்து ஹான்ஸ் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே 4 பேரையும் போலீசார் கைது விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வண்டியை ஓட்டிவந்தவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் மன்சூர் (வயது 33) என்பதும், அவருடன் வந்தவர்கள் கோவை மரக்கடையை பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (34), முகம்மது கலில் (36), உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் (25)என்பதும் தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை கோவை பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் உள்ள களாசிபாளையம் மார்க் கெட்டில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது. தொப்பூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டபோது அவர்கள் மாட்டிக் கொண்டனர்.
கைதான 4பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு தருமபுரி வழியாக அடிக்கடி பன்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக தருமபுரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை கண்காணித்து வாகன சோதனையில் ஈடுபட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தர விட்டார்.
அவரது உத்தரவின் பேரில் கடந்த மாதத்தில் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை தருமபுரி வழியாக கடத்தி வந்தவர்களையும், அவரது வண்டிகளையும் தொப்பூர் சோதனை சாவடி அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.
மீண்டும் குட்கா மற்றும் தடை செய்யப்ட்ட புகையிலை பொருட்களை தமிழகத்திற்கு கடத்தி செல்வதாக வந்த ரகசிய தகவலை கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று தொப்பூர் சோதனை சாவடி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஒரு மினிலாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது வண்டியில் வந்த 4பேர் சந்தேகம்படியான முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்தனர். உடனே போலீசார் மினிலாரி சோதனை செய்தனர். அப்போது வண்டியில் 60 பண்டல்களில் 70 அட்டை பெட்டிகளில் அடைத்து மறைத்து வைத்து ஹான்ஸ் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே 4 பேரையும் போலீசார் கைது விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வண்டியை ஓட்டிவந்தவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் மன்சூர் (வயது 33) என்பதும், அவருடன் வந்தவர்கள் கோவை மரக்கடையை பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (34), முகம்மது கலில் (36), உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் (25)என்பதும் தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை கோவை பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் உள்ள களாசிபாளையம் மார்க் கெட்டில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது. தொப்பூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டபோது அவர்கள் மாட்டிக் கொண்டனர்.
கைதான 4பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
சென்னை அண்ணாநகரில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்திவரும் என்ஜினீயரை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அம்பத்தூர்:
கொளத்தூர் ராஜன் நகரை சேர்ந்தவர் பிரமோத். என்ஜினீயரான இவர் அண்ணாநகர் டி பிளாக்கில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 10 மணிக்கு பிரமோத் வீட்டுக்கு செல்ல அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அங்கிருந்த தனது காரில் ஏறிய போது 4 பேர் திடீரென்று அவரை தாக்கி காருக்குள் தூக்கி போட்டனர். அவரது வாயில் துணியை திணித்து கை, கால்களை கட்டி காருக்கு பின்னால் போட்டு கடத்தி சென்றனர்.
கார் ஆவடியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கார் அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னலில் நின்ற போது முன்னால் இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் காரில் இருந்த 4 பேரிடம் தகராறில் ஈடுபட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பிரமோத் தனது கால்களால் கார் கண்ணாடியை எட்டி உதைத்தார். இதனால் சந்தேகம் அடைந்த வாகன ஓட்டிகள், பொது மக்கள் காரை மடக்கினர். உடனே காரில் இருந்து 3 பேர் தப்பி ஓடினார்கள். ஒருவன் மட்டும் பொது மக்களிடம் சிக்கினான்.
காரில் இருந்த பிரமோத்தை பொது மக்கள் மீட்டனர். அப்போது தன்னை 4 பேரும் தாக்கி கடத்தி சென்றனர் என்று கூறினார்.
இதுகுறித்து பிரமோத் அண்ணாநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் ஓட்டேரியை சேர்ந்த ஜானகி ராமன் என்பதும், தப்பி ஓடியவர்கள் ஓட்டேரியை சேர்ந்த இம்ரான், பட்டாளத்தை சேர்ந்த பிரபாகரன், பிரான்சிஸ் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தப்பி ஓடிய மற்ற 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் பிரமோத் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதால் அவரிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கும் என்று எண்ணி பணம் பறிக்க அவரை கடத்தியதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொளத்தூர் ராஜன் நகரை சேர்ந்தவர் பிரமோத். என்ஜினீயரான இவர் அண்ணாநகர் டி பிளாக்கில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 10 மணிக்கு பிரமோத் வீட்டுக்கு செல்ல அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அங்கிருந்த தனது காரில் ஏறிய போது 4 பேர் திடீரென்று அவரை தாக்கி காருக்குள் தூக்கி போட்டனர். அவரது வாயில் துணியை திணித்து கை, கால்களை கட்டி காருக்கு பின்னால் போட்டு கடத்தி சென்றனர்.
கார் ஆவடியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கார் அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னலில் நின்ற போது முன்னால் இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் காரில் இருந்த 4 பேரிடம் தகராறில் ஈடுபட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பிரமோத் தனது கால்களால் கார் கண்ணாடியை எட்டி உதைத்தார். இதனால் சந்தேகம் அடைந்த வாகன ஓட்டிகள், பொது மக்கள் காரை மடக்கினர். உடனே காரில் இருந்து 3 பேர் தப்பி ஓடினார்கள். ஒருவன் மட்டும் பொது மக்களிடம் சிக்கினான்.
காரில் இருந்த பிரமோத்தை பொது மக்கள் மீட்டனர். அப்போது தன்னை 4 பேரும் தாக்கி கடத்தி சென்றனர் என்று கூறினார்.
இதுகுறித்து பிரமோத் அண்ணாநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் ஓட்டேரியை சேர்ந்த ஜானகி ராமன் என்பதும், தப்பி ஓடியவர்கள் ஓட்டேரியை சேர்ந்த இம்ரான், பட்டாளத்தை சேர்ந்த பிரபாகரன், பிரான்சிஸ் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தப்பி ஓடிய மற்ற 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் பிரமோத் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதால் அவரிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கும் என்று எண்ணி பணம் பறிக்க அவரை கடத்தியதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






