செய்திகள்
ராமநாதபுரம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
ராமநாதபுரம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியாகினர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மாரி மகன் பால்பாண்டி (வயது 25). ராமநாதபுரம் லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் மோகன் (25) . பெயிண்டர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரத்தில் இருந்து லெட்சுமிபுரம் ஊருணி வழியாக சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பால்பாண்டி ஓட்டிச்சென்றுள்ளார்.
இவர்கள் லெட்சுமிபுரம் கரையை ஒட்டிய தேவிபட்டினம் சாலையில் சென்ற போது நிலைதடுமாறி ரோட்டின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இது குறித்து பால்பாண்டியின் தாய் சுசீலா (50) அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொங்கல் திருநாளில் வாலிபர்கள் விபத்தில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மாரி மகன் பால்பாண்டி (வயது 25). ராமநாதபுரம் லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் மோகன் (25) . பெயிண்டர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரத்தில் இருந்து லெட்சுமிபுரம் ஊருணி வழியாக சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பால்பாண்டி ஓட்டிச்சென்றுள்ளார்.
இவர்கள் லெட்சுமிபுரம் கரையை ஒட்டிய தேவிபட்டினம் சாலையில் சென்ற போது நிலைதடுமாறி ரோட்டின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இது குறித்து பால்பாண்டியின் தாய் சுசீலா (50) அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொங்கல் திருநாளில் வாலிபர்கள் விபத்தில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.