செய்திகள்
தற்கொலை

பழனி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-01-14 05:41 GMT   |   Update On 2021-01-14 05:41 GMT
பழனி அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெய்க்காரப்பட்டி:

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் குந்தன் குமார் (வயது 25). இவர் பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குடியகுமாரி (20). இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. 

இதனால் குடிய குமாரி மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் குந்தன் குமார் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த குடியகுமாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து பழனி சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News