செய்திகள்
கொள்ளை

கோவை அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் 49 பவுன் நகைகள் திருட்டு

Published On 2021-01-12 13:37 GMT   |   Update On 2021-01-12 13:37 GMT
கோவை அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் 49 பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவையை அடுத்த சூலூர் பேரூராட்சி அன்னை சகாயமாதா தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 49). இவர், சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசப்பின் உறவினர் ஒருவர் வடவள்ளியில் இறந்துவிட்டார். அது குறித்து விசாரிப்பதற்காக ஜோசப் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் சென்றனர். நேற்று காலை அவர் வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 49 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News