செய்திகள்
கரூர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
கரூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் (வயது 40) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.3,500-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.