செய்திகள்
மலைக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மலைக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைக்கோட்டை:
திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா தலைமையில் போலீசார் நேற்று காலை திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருச்சி உறையூர் குழுமணி ரோடு காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 20), உறையூர் நவாப் தோட்டம் செவ்வந்தி தோப்பை சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், அவர்கள் கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.