செய்திகள்
கோப்புப் படம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

Published On 2021-01-05 01:22 GMT   |   Update On 2021-01-05 01:29 GMT
சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களான எழும்பூர், சிந்தாதரிப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி, புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட  பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Tags:    

Similar News