செய்திகள்
கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு படைவீரர்கள் கயிறுக்கட்டி உயிருடன் மீட்ட காட்சி

நொய்யல் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

Published On 2021-01-03 13:01 GMT   |   Update On 2021-01-03 13:01 GMT
நொய்யல் அருகே உள்ள மலையம்பாளையம் பகுதியில் கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு படைவீரர்கள் கயிறுக்கட்டி உயிருடன் மீட்டனர்.
நொய்யல்:

நொய்யல் அருகே உள்ள மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. 

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை கயிறுக்கட்டி உயிருடன் மீட்டனர்.
Tags:    

Similar News