செய்திகள்
நல்லம்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது
நல்லம்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி வாரச்சந்தை முன்பு சேலம்-தர்மபுரி பைபாஸ் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நல்லம்பள்ளியை சேர்ந்த ஆதிகேசவன் (வயது 23) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில், அந்த மோட்டார்சைக்கிளை 2 பேரும் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் அதியமான்கோட்டை போலீசார் கைது செய்து, மோட்டார்சைக்கிளை மீட்டனர்.