செய்திகள்
கேரளாவில் இருந்து குமரிக்கு சொகுசு காரில் கடத்திய 2¼ கிலோ கஞ்சா பறிமுதல்- வாலிபர் கைது
கேரளாவில் இருந்து குமரிக்கு சொகுசு காரில் கடத்திய 2¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
கருங்கல்:
கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யருக்கு கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர், போலீசாருடன் எட்டணி சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். அப்போது காரை ஓட்டி வந்தவர் தப்பியோட முயற்சி செய்தார். உடனே அவரை மடக்கி பிடித்த போலீசார், காரில் சோதனை செய்தனர்.
காரில் 2¼ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்திய போது, காட்டாத்துறை குருவிளைகாடு காலனி பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 25) என்பதும் கஞ்சாவை கேரளாவில் இருந்து சொகுசு காரில் கடத்தி வந்து மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து ராஜேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.