செய்திகள்
விபத்து

சங்ககிரி அருகே சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

Published On 2021-01-01 09:27 GMT   |   Update On 2021-01-01 09:27 GMT
சங்ககிரி அருகே சரக்கு ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்ககிரி:

எடப்பாடி அருகே உள்ள வெண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 40). தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் சங்ககிரிக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது சங்ககிரி அருகே வேலம்மா வலசு பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது எதிரே எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ராஜா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News