செய்திகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் -முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தின. கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களில், இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.