செய்திகள்
கவரிங் நகையை அடகு வைத்து ரூ.25 ஆயிரம் மோசடி- வாலிபர் கைது
கவரிங் நகையை அடகு வைத்து ரூ.25 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை அருகே விமல்சந்த் என்பவர் அடகுகடை வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இந்த கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாலாஜி(வயது 30) என்பவர் தங்க டாலர் ஒன்றை அடகுவைத்து ரூ.25 ஆயிரம் பணம் பெற்றார்.
இந்தநிலையில், நேற்று முன்தினமும் பாலாஜி அதேபோல ஒரு தங்க டாலரை கொண்டுவந்து அடகுவைக்க முயன்றார். இதனால் சந்தேகமடைந்த விமல்சந்த் அந்த தங்க டாலரை உரசிப்பார்த்தார். அப்போது, அது கவரிங் என்பது தெரியவந்தது. உடனே அவர், பாலாஜி ஏற்கனவே அடகுவைத்த டாலரையும் உரசிப்பார்த்தார். அப்போது அதுவும் கவரிங் என்பது தெரியவந்தது. இதையடுத்து கவரிங் நகையை அடகுவைத்து ரூ.25 ஆயிரம் மோசடி செய்ததாக விமல்சந்த் கொடுத்த புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை அருகே விமல்சந்த் என்பவர் அடகுகடை வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இந்த கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாலாஜி(வயது 30) என்பவர் தங்க டாலர் ஒன்றை அடகுவைத்து ரூ.25 ஆயிரம் பணம் பெற்றார்.
இந்தநிலையில், நேற்று முன்தினமும் பாலாஜி அதேபோல ஒரு தங்க டாலரை கொண்டுவந்து அடகுவைக்க முயன்றார். இதனால் சந்தேகமடைந்த விமல்சந்த் அந்த தங்க டாலரை உரசிப்பார்த்தார். அப்போது, அது கவரிங் என்பது தெரியவந்தது. உடனே அவர், பாலாஜி ஏற்கனவே அடகுவைத்த டாலரையும் உரசிப்பார்த்தார். அப்போது அதுவும் கவரிங் என்பது தெரியவந்தது. இதையடுத்து கவரிங் நகையை அடகுவைத்து ரூ.25 ஆயிரம் மோசடி செய்ததாக விமல்சந்த் கொடுத்த புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.