செய்திகள்
மரணம்

தென்கரைக்கோட்டை அருகே ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2020-12-28 16:30 GMT   |   Update On 2020-12-28 16:30 GMT
தென்கரைக்கோட்டை அருகே ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:

தென்கரைக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் அங்குள்ள ஏரி வழியாக நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஏரியில் தவறி விழந்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீசார் விரைந்து சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News