செய்திகள்
திருவேங்கடம் அருகே திருட்டு வழக்கில் 2 பேர் கைது
திருவேங்கடம் அருகே திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் மெயின் பஜார் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் சண்முகம் (வயது 50). சம்பவத்தன்று இரவில் இவரது கடையில் புகுந்த மர்மநபர்கள், கடையில் இருந்த சுமார் ரூ.13 ஆயிரம் மதிப்பிலான பழைய இரும்பு பொருட்களை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருவேங்கடம் அருகே வையக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த அழகர்பாண்டி (வயது 30), மாரீசுவரன் (28) ஆகிய 2 பேரும் சேர்ந்து பழைய இரும்பு கடையில் பொருட்களை திருடியது தெரிய வந்தது. எனவே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.