search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு வழக்கு"

    • பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஐந்தாயிரம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வாட்ச்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பிரிதீவிராஜ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் துரை பிரித்திவிராஜ் (35). இவர் வி.ஏ.ஓ. வாக பணியாற்றி விருப்பு ஓய்வுபெற்றவர்.

    தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுப்புற சூழல் அணி பிரிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறார்.

    கடந்த 23-ந்தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடப்பது தெரிய வந்தது. பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஐந்தாயிரம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வாட்ச்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தேவி வழக்குப்பதிவு செய்து பிரிதீவிராஜ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறிஞ்சாக்குளம் பகுதியில் வசித்து வரும் மாணிக்கம் (61) என்பவர் பணம் மற்றும் பொருட்களை திருடியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பணத்தையும், பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில் தற்போது குறிஞ்சாக்குளத்தில் 2-வது திருமணம் முடித்து கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

    2-வது மனைவியின் மகன் கர்ணன் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார். தந்தை மாணிக்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் கர்ணன் விரக்தியான மனநிலையில் இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை திருட்டு வழக்கில் கைதானதால் பட்டதாரி மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.
    • போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    தேவதானப்பட்டி:

    மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சடகோபாலன் மகன் வெங்கடேன் (வயது 46). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ஜாமீனில் வெளி வந்த வெங்கடேசன் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெரியகுளம் உதவி அமர்வு நீதிபதி தலைமறைவான குற்றவாளியை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என தேவதானப்பட்டி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

    அதன்படி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.

    பின்னர் நேற்று இரவு அவரை கைது செய்து பெரியகுளம் அழைத்து வந்தனர். 20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    • சிறுமி ஜெயில் கதவை தட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • தாயைக் காண ஜெயில் கதவை தட்டியபடி சிறுமி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் புறநகர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

    இளம் பெண்ணை திருட்டு வழக்கில் கைது செய்த போலீசார் கர்னூல் ஊரக தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள பெண்கள் சப்-ஜெயிலில் அடைத்தனர்.

    தாயை போலீசார் எதற்காக கைது செய்து ஜெயிலில் அடைத்தனர் என சிறுமிக்கு தெரியவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் உன்னுடைய தாய் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    நேற்று முன்தினம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள பெண்கள் சப்-ஜெயிலுக்கு சிறுமி சென்றார். அப்போது ஜெயிலின் கதவு மூடப்பட்டு இருந்தது.

    தனது தாயை காண வேண்டும் என கூறி ஜெயில் கதவை பலமுறை தட்டிப் பார்த்தார். ஜெயில் கதவு திறக்காததால் கதறி அழுதபடி மீண்டும் மீண்டும் கதவை தட்டிக் கொண்டே இருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சிறுமி ஜெயில் கதவை தட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஜெயில் அதிகாரிகள் கதவைத் திறந்து சிறுமியை ஜெயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு தனது தாயை கண்ட சிறுமி அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

    அப்போது சிறுமி தனது தாயிடம் போலீசார் உன்னை ஏன் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள் என கேட்ட சம்பவம் அங்குள்ளவர்களின் நெஞ்சை உருக செய்தது.

    சிறிது நேர சந்திப்பிற்கு பிறகு சிறுமியின் உறவினர்கள் ஜெயிலுக்கு வந்தனர்.

    ஜெயில் அதிகாரிகள் சிறுமியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். தாயைக் காண ஜெயில் கதவை தட்டியபடி சிறுமி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீடு புகுந்து கொள்ளை அடிக்க கும்பலாக திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
    • போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கை விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    தக்கலை :

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுடலைகண்ணு (வயது 58), கட்டிட தொழிலாளியான இவர் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு தக்கலையில் வீடு புகுந்து கொள்ளை அடிக்க கும்பலாக திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    அதன் பின்பு வழக்குக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் சென்னையில் தலைமறைவாக குடும்பத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்துபாண்டியன் தலைமையில் தக்கலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தார். அவரை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தக்கலை போலீசாரால் தேடப்பட்டவர் என தெரியவந்தது. உடனே அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கை விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • 3 பேரும் சிறையில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    சோழிங்கநல்லூர்:

    செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 7-வது அவென்யுவில் வசித்து வந்தவர் அருண்குமார் (வயது 24). தனியார் கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கடந்த 17-ந்தேதி அதிகாலை வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை காணாது அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் சோழிங்கநல்லூர் கே.கே.சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நம்பர் பிளேட் இல்லாமல் ஒரே மோட்டார் சைக்கிளிள் வந்த 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த இளவரசன் (24), யாழின்ராஜ் (24), செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த அசோக் (24) என்பது தெரியவந்தது. அவர்கள் திருட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி சென்னை மணலி புதுநகர் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில் இளவரசன் மீது திருச்சி, துறையூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி, உள்ளிட்ட பல வழக்குகளில் பலமுறை சிறை சென்று வந்ததுள்ளார் என்பதும் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    அசோக் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி, மிரட்டல், கத்தியால் வெட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பலவழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை சிறை சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. யாழின்ராஜ் மீது கடந்த 2021-ம் ஆண்டு பெண் கடத்தல் வழக்கு, ஆள் கடத்தல் வழக்குகளில் சிறை சென்றதும், 12-ம் வகுப்பு முடித்து விட்டு டாக்டருக்கு படிக்க பிலிப்பைன்ஸ் சென்று வந்ததும், கடைசியாக சுகாதார ஆய்வாளராக தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று பணி உத்தரவுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது. 3 பேரும் சிறையில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் அசோக் சென்னையில் திருடும் மோட்டார் சைக்கிள்களை திருச்சிக்கு எடுத்து சென்று இளவரசன் மற்றும் யாழின்ராஜிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளார்.

    இடையில் துறையூர் போலீசாரின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து இளவரசன், யாழின் ராஜ் இருவரும் அங்குள்ள கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். யாழின்ராஜின் மனைவிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதை சரி செய்ய சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் கம்பெனியில் வேலை பார்த்தால் போதுமான பணம் கிடைக்காது என்பதால் திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • வழக்கின் சாட்சி வாக்குமூலத்திற்காக எருமை மாட்டை ஆஜர்படுத்துமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
    • வழக்கில் இன்னும் 16 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பிஷன்புரா-சரண்வாஸ் ஹால், ஹர்மதா பகுதியை சேர்ந்தவர் சரண்சிங் செராவத் (வயது 48). விவசாயியான இவர் எருமை மாடுகள் வளர்த்து வருகிறார்.

    கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு சொந்தமான 3 எருமை மாடுகள் திருட்டு போயின. இதுகுறித்து சரண்சிங் செராவத் ஹர்மதா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் பரத்பூர் பகுதியில் இருந்து 2 எருமை மாடுகளை மீட்டு ஒப்படைத்தனர். அதில் ஒரு எருமை மாடு சில நாட்களில் இறந்து விட்டது. மேலும் இந்த எருமை மாடுகள் திருட்டு தொடர்பாக அர்ஷத் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் இதுதொடர்பான வழக்கு சவுமு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் எருமை மாட்டின் உரிமையாளரான சரண்சிங் செராவத் உள்பட மொத்தம் 21 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் 5 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கின் சாட்சி வாக்குமூலத்திற்காக எருமை மாட்டை ஆஜர்படுத்துமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று சரண்சிங் செராவத் எருமை மாட்டை ஒரு வாகனத்தில் ஏற்றி கோர்ட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

    இந்த சம்பவம் கோர்ட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியால் எருமை மாடு அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த வழக்கில் இன்னும் 16 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யபட உள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 13-ந்தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • இவ்வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டியை சேர்ந்தவர் சின்ராசு (வயது 32). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது ஊரில் நாடகம் பார்த்து விட்டு வீட்டில் தூங்கி கொண்டி ருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளையும், அவரது செல்போனையும் 2 பேர் திருடிச் சென்று விட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசில் சின்ராசு புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து லிங்கவாடியை சேர்ந்த மாணிக்கம் (34), ரெட்டியபட்டியை சேர்ந்த பாவம் (33) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் புலன் விசாரணை செய்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உதயசூரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இதில் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    • உமா பிரசாத் ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது.
    • திருவனந்தபுரம் விமான நிலையத்தின் வெளியே போலீசார் மறைந்து நின்று கண்காணித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போர்ட் மற்றும் பேட்டை போலீஸ் நிலையங்களின் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. அந்த வீடுகளில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இந்த சம்பவங்கள் குறித்து போர்ட் மற்றும் பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட நபரை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பதை கண்டறிய முடியவில்லை.

    ஆகவே கொள்ளை சம்பவம் நடந்த வீடுகள் இருந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் ஆட்டோவில் சந்தேகப்படும் வகையில் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அந்த ஆட்டோவின் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஓட்டலில் இருந்து வாலிபர் ஒருவரை அழைத்து வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அந்த ஓட்டலுக்கு சென்ற போலீசார், அந்த வாலிபரை பற்றி விசாரித்தனர்.

    அதில் அவர், ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த உமா பிரசாத் (வயது 32) என்பதும், ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அடிக்கடி வந்து சென்றதும் தெரிய வந்தது. ஆகவே திருவனந்தபுரத்தில் நடந்த திருட்டு சம்பவங்களில் அந்த வாலிபருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    அவர் எப்படியும் திருவனந்தபுரத்திற்கு மீண்டும் வரலாம் என்று கணித்த போலீசார், அவரது வருகையை கண்காணித்தனர். இந்நிலையில் வாலிபர் உமா பிரசாத் ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தின் வெளியே போலீசார் மறைந்து நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு வந்த உமா பிரசாத்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திருவனந்தபுரத்தில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆந்திர மாநிலத்தில் சிறு சிறு திருட்டுகளில் உமா பிரசாத் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர் மீது பல திருட்டு வழக்குகள் ஆந்திராவில் உள்ளன. இந் நிலையில் கேரள மாநிலத்தில் திருட்டில் ஈடுபட அவர் திட்டமிட்டார்.

    அதன்படி அவர், ஆந்திர மாநிலத்தில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். முதலில் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஆட்டோவில் சென்று அந்த பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிடுவார். அவ்வாறு நோட்டமிடும் போது, பூட்டியுள்ள வீடுகளின் முகவரியை குறித்து கொள்வார்.

    பின்பு இரவு நேரத்தில் அந்த வீடுகளுக்கு கூகுள் மேப்பை பயன்படுத்தி வந்து, கதவை உடைத்தோ அல்லது ஜன்னல் கம்பிகளை வளைத்தோ வீடுகளுக்கு புகுந்து நகைகளை கொள்ளையடித்திருக்கிறார். கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும், கொள்ளையடித்த நகைகளுடன் மீண்டும் ஆந்திராவிற்கு விமானத்தில் சென்று விடுவார்.

    கடந்த மே மாதம் முதல் அவர், திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்து இதேபோல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டபடி இருந்துள்ளார். கொள்ளையடிக்கும் நகைகளை ஆந்திராவிலேயே விற்று, அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

    ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சுற்றுலா பயணியை போன்று விமானத்தில் வந்து சென்றபடி இருந்துள்ளார். அதற்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு முறையும் திருவனந்தபுரம் வரும்போது, முதலில் சுற்றுலா தலங்களுக்கு செல்வார். அதன் பிறகே ஏதாவது பகுதிக்கு சென்று பூட்டி இருக்கும் வீடுகளை கண்டறிந்து கைவரிசை காட்டி இருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவர், திருவனந்தபுரத்தில் எத்தனை வீடுகளில் திருட்டில் ஈடுபட்டார் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் ஆந்திராவில் அடகு கடைகளில் விற்ற நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
    • போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர்.

    செங்கல்பட்டு:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சங்கராபுரத்தை சேர்ந்தவர் மோகன் (32). வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதிகளில் லேப்-டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனது.

    இந்த வழக்கு தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏகாட்டூர் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த மோகனை கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவரது மனைவி, மகனுடன் வந்து இருந்தார். அவர்களுடன் வக்கீலும் இருந்தார்.

    ஜெயிலில் இருந்து மோகன் வெளிய வந்ததும் அவரை பாசத்துடன் மனைவி கட்டி அணைத்து வரவேற்றார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

    அப்போது அங்கு சாதாரண உடையில் இருந்த கேளம்பாக்கம் போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர். அவர்கள் மோகனை வலுக்கட்டாயமாக அவர்களது வாகனத்தில் ஏற்ற இழுத்து சென்றனர். இதனை கண்ட மோகனின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கணவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரது வக்கீலும் பிடிவாரண்டு இல்லாமல் எப்படி கைது செய்யமுடியும்? பிடிவாரண்டை காட்டிவிட்டு மோகனை அழைத்து செல்லுங்கள் என்றார்.

    எனினும் இதனை போலீசார் கண்டு கொள்ளாமல் மோகனை தங்களது வாகனத்தில் ஏற்றி செல்வதில் மும்முரமாக இருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் கணவரை காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மோகனின் மனைவி தவித்தார்.

    திடீரென அவர் தனது கணவர் மோகனை கட்டி அணைத்தபடி கதறி அழுதார். மேலும் தனது மகனையும் ஒரு கையில் வைத்தபடி போலீசாரிடம் கெஞ்சினார். இதனால் ஜெயில் வாசல் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. கணவரை காப்பாற்ற வேண்டும் என்ற மனைவியின் பாசப்போட்டம் அங்கிருந்தவர்களின் மனதை கனக்க செய்தது.

    இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் தவித்து நேரத்தில் கணவர் மோகனை அழைத்துக்கொண்டு அவரது மனைவி மகனுடன் வேறொரு காரில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் மோகனை கைது செய்ய வந்த போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஏகாட்டூர் பகுதியில் உள்ள விடுதிகளில் 100-க்கும் மேற்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனதாக புகார்கள் வந்து உள்ளன. இதுபற்றி மோகனிடம் விசாரிக்க முடிவு செய்து வந்தோம் என்றனர்.

    • அவிநாசி பாளையத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார்.
    • ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் :

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி நல்லசெல்லி பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர்,47; பருப்பு வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம்,45 என்பவரிடம் பொள்ளாச்சியில் பருப்பு விற்ற பணத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இவர் கடந்த மாதம், 27ல் பொள்ளாச்சி சென்று பணத்தை வசூல் செய்து விட்டு வரும் வழியில், பொங்கலுார், அவிநாசி பாளையத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார். பின், வந்து பார்த்த பொழுது வேனில் வைத்திருந்த, 19.54 லட்சம் ரூபாயை காணவில்லை.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த மே, 5ல் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபு, 26 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவருடன் பணத்தை திருடி சென்ற மேலும் இருவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவிநாசிபாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் மேலும் விசாரித்ததில், அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் ராமு, 25 என்பதும், பணம் திருடிய வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள போலீஸ் புறக்காவல் மையத்தில் இருவரையும் அமர வைத்தனர். அப்போது போலீசார் அசந்த நேரத்தில் சுகன், தமிழ்செல்வி தப்பி சென்று விட்டனர்.
    • அரக்கோணம் பகுதியில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் . இவரது மனைவி சுசீலா (வயது 70).

    இவர் வீட்டை பூட்டி விட்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்டு பூட்டை திறந்து நகை, பணத்தை திருடி சென்று விட்டனர்.

    திருடிய ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.58 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். பணம் எடுத்தது குறித்து சுசிலா செல்போனுக்கு தகவல் வந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் சுசிலா புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் பாராஞ்சி கிராமம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த சுகன் (25), இவரது மனைவி தமிழ்ச்செல்வி (22) ஆகியோர் சுசீலாவின் வீட்டுக் கதவை திறந்து மூக்குத்தி மற்றும் ஏ.டி.எம். கார்டை திருடியது தெரியவந்தது. கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களை பரிசோதனை செய்து உடல் சான்று பெறுவதற்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

    அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள போலீஸ் புறக்காவல் மையத்தில் இருவரையும் அமர வைத்தனர். அப்போது போலீசார் அசந்த நேரத்தில் சுகன், தமிழ்செல்வி தப்பி சென்று விட்டனர்.

    இதை சற்றும் எதிர்பாராத போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரெயில் நிலையம், பஸ்நிலையம் போன்ற இடங்களில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரக்கோணம் பகுதியில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பணங்களை வசூல் செய்து வேனில் கொண்டு வருவது வழக்கம்
    • பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டனர்

     பல்லடம் : 

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள நல்லசெல்லிபாளை யத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரதுமகன் ராஜசேகர்(வயது 47). இவர் பல்வேறு இடங்களுக்கு பருப்புகளை கொண்டு சென்று மொத்தமாக விற்பனை செய்துவிட்டு பணங்களை வசூல் செய்து வேனில் கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 27-ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு செல்வதற்காக கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளனர். அப்போது பொங்கலூரை அடுத்த அவினாசிபாளையம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பல்வேறு இடங்க ளில் வசூல் செய்த ரூ.19 லட்சத்து 54 ஆயிரத்தை ஒரு பேக்கில் வைத்து வாகனத்தில் உள்ளே வைத்து சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நப ர்கள் டீ குடித்து விட்டு வருவதற்குள் அந்த பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து ராஜசேகர் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரி வித்தார். புகாரின் அடி ப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் அந்த பணத்தை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனி ப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் இந்த வழக்கில் சம்பந்த ப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து போலீசார் மேற்கொ ண்டு உடன் வந்த 2 நபர்கள் மற்றும் பணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×