search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேனில் வைத்திருந்த ரூ.19 லட்சம் திருட்டு வழக்கில் ஒருவர் கைது
    X

    கோப்புபடம்


    வேனில் வைத்திருந்த ரூ.19 லட்சம் திருட்டு வழக்கில் ஒருவர் கைது

    • பணங்களை வசூல் செய்து வேனில் கொண்டு வருவது வழக்கம்
    • பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டனர்

    பல்லடம் :

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள நல்லசெல்லிபாளை யத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரதுமகன் ராஜசேகர்(வயது 47). இவர் பல்வேறு இடங்களுக்கு பருப்புகளை கொண்டு சென்று மொத்தமாக விற்பனை செய்துவிட்டு பணங்களை வசூல் செய்து வேனில் கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 27-ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு செல்வதற்காக கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளனர். அப்போது பொங்கலூரை அடுத்த அவினாசிபாளையம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பல்வேறு இடங்க ளில் வசூல் செய்த ரூ.19 லட்சத்து 54 ஆயிரத்தை ஒரு பேக்கில் வைத்து வாகனத்தில் உள்ளே வைத்து சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நப ர்கள் டீ குடித்து விட்டு வருவதற்குள் அந்த பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து ராஜசேகர் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரி வித்தார். புகாரின் அடி ப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் அந்த பணத்தை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனி ப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் இந்த வழக்கில் சம்பந்த ப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து போலீசார் மேற்கொ ண்டு உடன் வந்த 2 நபர்கள் மற்றும் பணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×