search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CASE OF THEFT"

    • பணங்களை வசூல் செய்து வேனில் கொண்டு வருவது வழக்கம்
    • பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டனர்

     பல்லடம் : 

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள நல்லசெல்லிபாளை யத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரதுமகன் ராஜசேகர்(வயது 47). இவர் பல்வேறு இடங்களுக்கு பருப்புகளை கொண்டு சென்று மொத்தமாக விற்பனை செய்துவிட்டு பணங்களை வசூல் செய்து வேனில் கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 27-ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு செல்வதற்காக கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துள்ளனர். அப்போது பொங்கலூரை அடுத்த அவினாசிபாளையம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பல்வேறு இடங்க ளில் வசூல் செய்த ரூ.19 லட்சத்து 54 ஆயிரத்தை ஒரு பேக்கில் வைத்து வாகனத்தில் உள்ளே வைத்து சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நப ர்கள் டீ குடித்து விட்டு வருவதற்குள் அந்த பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து ராஜசேகர் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரி வித்தார். புகாரின் அடி ப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் அந்த பணத்தை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனி ப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் இந்த வழக்கில் சம்பந்த ப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து போலீசார் மேற்கொ ண்டு உடன் வந்த 2 நபர்கள் மற்றும் பணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சொரத்தூர் பிரிவு ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சிலர் நடமாடுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் துறையூர் பைபாஸ் சாலையில் உள்ள சொரத்தூர் பிரிவு ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சிலர் நடமாடுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் அங்கு சென்ற போது, 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்த சரனிஷ் (22), போண்டா கார்த்திக் (எ) கார்த்திக் (20), செங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பரத் (24) என்பதும், 3 பேரும் சேர்ந்து துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டாத்தூர், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மங்கப்பட்டி மற்றும் எரகுடி ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு,திருடிய நகைகளை திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்த மூர்த்தி (36) என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சரனிஷ், பரத், கார்த்திக் மற்றும் திருட்டு நகைகளை விற்க உதவிய மூர்த்தி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த துறையூர் போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 20 பவுன் எடையுள்ள தங்க நகைகளை மீட்டனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×