செய்திகள்
பென்னாகரத்தில் பர்னிச்சர் கடையில் திருட முயற்சி - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பென்னாகரத்தில் பர்னிச்சர் கடையில் திருட முயற்சி செய்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீச்சு தேடி வருகின்றனர்.
பென்னாகரம்:
பென்னாகரம் அடுத்த எட்டியாம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் முள்ளுவாடி பஸ் நிறுத்தத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பிரகாஷ் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை அவர் கடையை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும் கடையின் கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் மேற்கூரையை உடைத்து கடையில் திருட முயன்றது தெரியவந்தது இதுகுறித்து பிரகாஷ் பென்னாகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கடையில் திருட முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.