செய்திகள்
கோப்புப்படம்

சாலையோரத்தில் பஸ் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்

Published On 2020-12-19 17:57 GMT   |   Update On 2020-12-19 17:57 GMT
மங்களமேடு அருகே சாலையோரத்தில் பஸ் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பிம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள், உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ்சில், கீழப்புலியூர் அருகே உள்ள பீல்வாடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர். மங்களமேடு அருகே உள்ள கீழப்புலியூருக்கும், பீல்வாடி கிராமத்திற்கும் இடையே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பியுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தையொட்டி பஸ் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணித்த பிம்பலூர் கிராமத்தை சேர்ந்த தமிழரசி, காளியம்மாள், காளிமுத்து, பாப்பாத்தி, கலைச்செல்வி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள், இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து பக்கத்து கிராமங்களில் இருந்து சென்ற ஏராளமான பொதுமக்கள், பஸ்சில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்குள்ளான வாகனத்தை ஓட்டி வந்த மறவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News