செய்திகள்
கோப்பு படம்.

திருக்கோவிலூர் அருகே விவசாயி மயங்கி விழுந்து பலி

Published On 2020-12-19 08:47 GMT   |   Update On 2020-12-19 08:47 GMT
திருக்கோவிலூர் அருகே தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த விவசாயி மயங்கி விழுந்து பலியானார்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூரை அடுத்த கனகநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மகன் முருகன்(வயது 34). விவசாயியான இவர் நேற்று காலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். 

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News