செய்திகள்
கோப்பு படம்.

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 34 பேர் பாதிப்பு

Published On 2020-12-16 11:57 GMT   |   Update On 2020-12-16 11:57 GMT
சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. தினமும் 1, 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 54 ஆயிரத்து 877 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 34 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 78 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News