செய்திகள்
வேளாண் சட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது -எல்.முருகன் குற்றச்சாட்டு
திமுக தூண்டுதலின்பேரில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை:
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது:-
அதிமுகவுடனான எங்கள் கூட்டணி தொடர்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும்.
வேளாண் சட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுக தூண்டுதலின்பேரில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் என்றெல்லாம் பேசுகிறார்! கடவுள் இல்லை என்று இனியும் சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது!
இவ்வாறு அவர் கூறினார்.