செய்திகள்
புறநகர் ரெயில்களில் மாணவர்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும்- கமல் வலியுறுத்தல்
புறநகர் ரெயில்களில் மாணவர்கள் பயணம் செய்வதற்கு அனுமதிக்கும்படி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கமல் கூறி உள்ளார்.