செய்திகள்
கைது

பீளமேட்டில் வாலிபரிடம் பணம் திருடியவர் கைது

Published On 2020-12-05 08:32 GMT   |   Update On 2020-12-05 08:32 GMT
பீளமேட்டில் வாலிபரிடம் பணம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை பீளமேடு கருப்பண்ண கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் வில்சன் (வயது 20). இவர் நேற்று முன்தினம் ஹோப்காலேஜ் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென வில்சனின் சட்டை பாக்கெட்டில் வைத்து இருந்த ரூ.270-ஐ திருடிக்கொண்டு தப்பி ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வில்சன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் ஒண்டிப்புதூர் சூர்யா நகர் 2-வது வீதியை சேர்ந்த கணேஷ் வெற்றிவேல் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News