செய்திகள்
விபத்து பலி

திண்டுக்கல் அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2020-12-04 09:25 GMT   |   Update On 2020-12-04 09:25 GMT
திண்டுக்கல் அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டியை அடுத்த வண்ணம்பட்டியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர் வண்ணம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பித்தளைப்பட்டி பிரிவு அருகே வந்தபோது எதிரே திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி நோக்கி சென்ற சிமெண்டு கலவை வாகனம் வீரமுத்து ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வீரமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வீரமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News