செய்திகள்
முககவசம் அணியாத 50 பேர் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாத 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போலீசார் முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.