செய்திகள்
கோப்புபடம்

பாலக்கோடு அருகே போலி பெண் டாக்டர் கைது

Published On 2020-12-03 12:09 GMT   |   Update On 2020-12-03 12:09 GMT
பாலக்கோடு அருகே போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி அனிதா (வயது 47) இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் வந்தது. 

இதையடுத்து பஞ்சப்பள்ளி போலீசார் விரைந்து சென்று போலி டாக்டர் அனிதாவை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்து மருந்து, மாத்திரை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News