செய்திகள்
மழை

புரெவி புயல்: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய மழை

Published On 2020-12-03 02:08 GMT   |   Update On 2020-12-03 02:08 GMT
சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை:

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக  சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி, தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

Tags:    

Similar News