செய்திகள்
கடையில் மர்ம நபர் திருடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதை காணலாம்

தஞ்சையில் 5 கடைகளில் திருட்டு- போலீசார் விசாரணை

Published On 2020-11-30 04:48 GMT   |   Update On 2020-11-30 04:48 GMT
தஞ்சையில் 5 கடைகளில் பணம், பொருட்கள் திருட்டுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாதாக்கோட்டையை சேர்ந்தவர் சரவணன். இவர் வங்கி ஊழியர் காலனியில் மளிகைக்கடை வைத்துள்ளார். இவரது கடையின் பூட்டை உடைத்து நள்ளிரவில் மர்மநபர்கள் புகுந்தனர். அங்கு எண்ணெய், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.

நேற்றுகாலை கடையை திறக்க வந்த சரவணன் கடை திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதேபோல் கலெக்டர் முருகராஜ்நகரை சேர்ந்த மூர்த்திராஜன்(42) என்பவரது கடையில் ரூ.2 ஆயிரம் மற்றும் சாக்லெட், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இதேபோல் அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு நடைபெற்றது.

இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மநபரின் உருவம் பதிவாகியுள்ளது. அந்த காட்சியை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News