செய்திகள்
லாலாபேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை:
லாலாபேட்டை அருகே நரசிங்கபுரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக ரோந்து வந்த லாலாபேட்டை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜுவானந்தம், நவீன்குமார், பெரியண்ணன், ரெங்கநாதன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.