செய்திகள்
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே உள்ள கீழ் குளம் பகுதி மாநின்றவிளையை சேர்ந்தவர் ராஜகோபால், மரப் பட்டறை தொழிலாளி. இவர் சம்பவத்தன்று நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கி வேலைக்கு சென்றார். பின்னர் வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அதை யாரோ திருடி சென்று விட்டனர்.
இதுபற்றி புதுக்கடை போலீசில் ராஜகோபால் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இனயம் புத்தன்துறையை சேர்ந்த சுதன் (வயது 36) என்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்த போது மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சுதனை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.