செய்திகள்
தஞ்சை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
தஞ்சை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம் படும் வகையில் ஒருவர், மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தஞ்சை வடக்குவாசல் பொந்தேரிபாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா(வயது 20) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக 1½ கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூர்யாவை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.