செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

கோவை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

Published On 2020-11-23 09:23 GMT   |   Update On 2020-11-23 09:23 GMT
கோவை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 44). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் செந்தில்வேலின் வீட்டு முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள், அங்கிருந்த பீரோவை திறந்து 5 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News