செய்திகள்
தற்கொலை

பல்லடத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2020-11-17 08:57 GMT   |   Update On 2020-11-17 08:57 GMT
பல்லடத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் இப்ராகிம். இவருடைய மகன் உசேன் (வயது 32). இவர் கரூர் அருகே உள்ள பள்ளப்பட்டியில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக மனஉளைச்சலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உசேனை பல்லடம் அறிவொளி நகர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். தீபாவளியன்று கரூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக இப்ராகிம் குடும்பத்துடன் புறப்பட்டு சென்றுவிட்டார்.

இதனால் உசேன் மட்டும் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டுக்காரர் இப்ராகிம்மிற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து நேற்றுகாலை இப்ராகிம் மனைவி சாலி வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது உசேன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் தூக்குப்போட்டு 3 நாட்களுக்கு மேல் ஆனதால் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சாலி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விரைந்து வந்து உசேன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News