செய்திகள்
வீரவநல்லூரில் மழையால் அறுந்து விழுந்த மின்வயரை மிதித்த விவசாயி பலி
வீரவநல்லூர் பகுதியில் மழையால் அறுந்து விழுந்த மின்வயரை மிதித்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நெல்லை:
வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று வீரவநல்லூர் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமான ராஜகுத்தாலபேரி பகுதியில் மின் வயர் அறுந்து சாலையில் கிடந்தது.
அப்பகுதியை சேர்ந்த விவசாயி அற்புதமணி (வயது 70) என்பவர் தினமும் காலையில் டீ குடிப்பதற்காக செல்வது வழக்கம். அது போல இன்று அதிகாலை 5 மணிக்கு சாலையில் நடந்து சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் கிடந்த மின்வயரை அவர் மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அற்புதமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று வீரவநல்லூர் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமான ராஜகுத்தாலபேரி பகுதியில் மின் வயர் அறுந்து சாலையில் கிடந்தது.
அப்பகுதியை சேர்ந்த விவசாயி அற்புதமணி (வயது 70) என்பவர் தினமும் காலையில் டீ குடிப்பதற்காக செல்வது வழக்கம். அது போல இன்று அதிகாலை 5 மணிக்கு சாலையில் நடந்து சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் கிடந்த மின்வயரை அவர் மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அற்புதமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.