செய்திகள்
தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுகட்டு மற்றும் ரூ.30 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகிலுள்ள சூசைநகர் பகுதியில், சிலர் பணம் வைத்து, சூதாடுவதாக முத்தையாபுரம் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
போலீசார் வருவதை கண்டதும், தப்பி ஓட முயன்ற, சூதாட்டத்தில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொன்னையா, பெரியசாமி, முத்தையாபுரத்தை சேர்ந்த அழகுராஜா, செல்வம், சுடலைகன்னு, கோவில்பிள்ளை நகரை சேர்ந்த அருள்ராஜ், ஆசீர், பிரபாகர், பொன்ராஜ், காதர்மீரான் நகரை சேர்ந்த சரவணன், சுபாஷ்நகர் மாரிமுத்து ஆகிய 11 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, சீட்டுகட்டு மற்றும் ரூ.30 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகிலுள்ள சூசைநகர் பகுதியில், சிலர் பணம் வைத்து, சூதாடுவதாக முத்தையாபுரம் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
போலீசார் வருவதை கண்டதும், தப்பி ஓட முயன்ற, சூதாட்டத்தில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொன்னையா, பெரியசாமி, முத்தையாபுரத்தை சேர்ந்த அழகுராஜா, செல்வம், சுடலைகன்னு, கோவில்பிள்ளை நகரை சேர்ந்த அருள்ராஜ், ஆசீர், பிரபாகர், பொன்ராஜ், காதர்மீரான் நகரை சேர்ந்த சரவணன், சுபாஷ்நகர் மாரிமுத்து ஆகிய 11 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, சீட்டுகட்டு மற்றும் ரூ.30 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.