செய்திகள்
கோவை அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை புலியகுளம் தனியார் பள்ளி அருகே சிலர் கஞ்சா பதுக்கி விற்பதாக ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் கஞ்சா பதுக்கி வைத்து விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சபினேஷ் ராகுல் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.