செய்திகள்
கைது

பெண்ணிடம் ஆபாசமாக பேசிய டெய்லருக்கு அடி-உதை: 2 பேர் கைது

Published On 2020-11-12 09:59 GMT   |   Update On 2020-11-12 09:59 GMT
நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய டெய்லருக்கு அடி-உதை விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சம்பட்டி குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 31), டெய்லர். இவர் அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போனுக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்துள்ளார். மேலும் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் கணவர் டெய்லர் கடைக்கு சென்று ஏன் என் மனைவியை செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினாய் என கேட்டு அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த டெய்லர் பிரபு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசில் நேற்று புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி டெய்லர் பிரபு மற்றும் இளம்பெண்ணின் கணவர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News