செய்திகள்
துறையூர் அருகே மதுவிற்றவர் கைது- 173 மதுபாட்டில்கள் பறிமுதல்
துறையூர் அருகே மதுவிற்றவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 173 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள பெரமங்கலம் பகுதியில் புலிவலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஓமாந்தூர் செல்லும் சாலையில் முட்புதர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஓமாந்தூரை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 173 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல்செய்தனர். அத்துடன், ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள பெரமங்கலம் பகுதியில் புலிவலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஓமாந்தூர் செல்லும் சாலையில் முட்புதர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஓமாந்தூரை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 173 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல்செய்தனர். அத்துடன், ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.