செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

தியேட்டர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை- கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

Published On 2020-11-05 08:43 GMT   |   Update On 2020-11-05 08:43 GMT
விதிமுறைகளை மீறி தியேட்டர்கள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் அறிவிப்பார். ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்துள்ளனர் என கமல்ஹாசன் கூறியிக்கிறார். இதுவரை ஆட்சியில் என்ன தவறு நடந்துள்ளது, எங்கு நடந்துள்ளது என ஆதாரத்துடன் கூறினால் நன்றாக இருக்கும். 

பொத்தம் பொதுவாக கூறினால் சரியாக இருக்காது. சினிமாவில் அப்படி பேசினால் சரியாக இருக்கும். அரசியல் தலைவர் என்ற முறையில் கமல்ஹாசன் பேச வேண்டும். ஒருவேளை தி.மு.க.வை நினைத்து அவர் கூறியிருக்கலாம். 

சுமார் 7 மாதங்களுக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தியேட்டர்களில் கடைபிடிக்கப்படும் என உரிமையாளர்கள் உத்திரவாதம் வழங்கி உள்ளனர். தியேட்டர்களை கண்காணிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

ஏதேனும் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என தியேட்டர் உரிமையாளர்களே தெரிவித்து உள்ளனர். எனவே அவர்களும் அதை மீற மாட்டார்கள். அரசும் அதை கண்காணிக்கும். விதிமுறைகளை மீறி தியேட்டர்கள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News