செய்திகள்
கோப்புபடம்

தர்மபுரி அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல் - வாலிபர் மீது புகார்

Published On 2020-11-05 08:28 GMT   |   Update On 2020-11-05 08:28 GMT
தர்மபுரி அருகே பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள நாயக்கன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் தீபிகா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடைக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவருடைய தந்தை கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதில் தனது மகளை சவுளுபட்டியை சேர்ந்த ஒரு வாலிபர் கடத்தி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News